குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். வீட்டில் தனது மகள் வாலிபர் ஒருவருடன் தனியாக இருந்ததை கண்டு அதிர்ந்து போய் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அப்போது, பெற்ற மகளே தந்தையிடம் தகராறு செய்து, தவறாக நடக்க முயன்றதாக போக்சோ வழக்கு தொடுப்பேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மாணவியை தாயிடம் ஒப்படைத்தனர்.