இதுகுறித்து களியக்காவல் போலீசாருக்குத் தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். குமரி மாவட்ட எல்லைப் பகுதியான நெட்டாசோதனைச் சாவடி வழியாக நாய்களைக் கொண்டு வந்தபோது, நாய்களுக்கு ஊசிபோடுவதற்குக் கொண்டுசெல்வதாகத் தெரிவித்துக்கொண்டு வந்துள்ளனர். கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள் குமரி எல்லையில் கொட்டப்படுவதைத் தொடர்ந்து - குமரி எல்லைப் பகுதியில் நாய்களைக் கொண்டுவிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நாய்களைக் கொண்டுவிட முயன்ற வாகனத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் கடையால் பேரூராட்சி சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிபட்ட நபர்களிடம் நாய்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து களியக்காவல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி