கருங்கல்:  மின்கம்பத்தில் மோதிய லாரி - பொதுமக்கள் மடக்கினர்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் (54) என்ற டிரைவர் கீழ்குளம் பகுதியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். ஜல்லி இறக்கிவிட்டு நாகர்கோவில் நோக்கிப் புறப்பட்டார். 

கருங்கல் அருகே உள்ள கருக்குபனை பகுதியில் லாரி நிலைதடுமாறி சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. லாரி டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் ஒரு ஆட்டோவில் லாரியைத் துரத்தி 8 கிலோமீட்டர் தூரம் பிடித்து, கருங்கல் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி