பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த தொடங்கினர். இது சம்பந்தமாக சமத்துவபுரம் பகுதியில் வாழும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்களை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமத்துவபுரம் மறுசீரமைப்பு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த ஊழியர்கள், வருவாய் துறையினர் மூலம் நிலத்தை அளந்து, பொதுப்பணித்துறை மூலம் குழந்தைகள் பூங்கா புதிதாக அமைத்து வருகின்றனர். இது சமத்துவபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.