இரணியலில் பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான பலசரக்கு கடையில் இருந்து முழு சாக்கு சின்ன வெங்காயம் மூடை திருட்டு போனது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அதை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனபால் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.