ரபீக் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லைல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரபீக் சில தினங்களுக்கு முன்பு ஏதோ விஷம் குடித்து மயங்கி நிலையில் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரபீக் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.