சம்பவ தினம் ஆனந்தமங்கலம் அருகே ஒரு வீட்டில் கட்டிட தொழில் செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்துள்ளார். இதில் தலை உட்பட பல இடங்களில் படுகாயம் அடைந்தவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிட்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் நேசமணி உயிரிழந்தார். இது குறித்து மேரி சுதா என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.