இதனை விவேகானந்தா கல்வி கழகத்தின் பொருளாளர் சுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர் ஆனந்த், சுந்தரம் கிளிட்டன் நிறுவனத்தின் மேலாளர் பெருமாள் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் ராம்குமார், நிர்வாக அதிகாரி முத்துக்குமார், கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் பணி நியமன ஆணைகளை பெற்றனர்.