மாலையில் நடந்த ஆண்டுவிழா கூட்டத்தில் கிளப் தலைவர் அனிஷ் தலைமை வகித்தார். கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாபு சிறப்புரை ஆற்றினார். நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் தேசிய அளவில் பள்ளிகளுக்குகிடையேயான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட ஜோஸ்னா என்பவருக்கும், தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்ட டோனி என்பவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?