இதைத் அடுத்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது, அங்குள்ள ஒரு வீட்டின் பக்கவாட்டில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 63 கேன்களில் 2,200 லிட்டர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் இருந்தது.
இதையடுத்து போலீசார் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து, நித்திரவிளை காவல் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை நடத்தி, நாகர்கோவில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.