மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட 7-ம் வார்டில் பறம்புகுளம் உள்ளது. ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட இந்தக் குளத்தை அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களினர் பயன்படுத்தி வந்தனர். மேலும் விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றன. தற்போது பாசிகள் அகற்றப்படாமல் குளம் பயனற்ற நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பகுதி இளைஞர்கள் ராபின், போஸ், நித்தின், அரிசந்திரன் தலைமையில் இளைஞர்கள் பலர் பாசிகளை அகற்றி, குளத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இதை பொதுமக்கள் பாராட்டினர்.