இதன் ஒரு பகுதியாக குழித்துறையில் உள்ள டாஸ்மாக் கடையில் இன்று 22-ம் தேதி பகல் குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் மினிகுமாரி, ஜெயந்தி, ரெத்தினமணி, விஜீ ஆகியோர் சென்று கோஷங்களை எழுப்பி முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர்.
அப்போது டாஸ்மாக் கடை பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் ஒட்டிய முதல்வர் ஸ்டாலின் படத்தை கிழித்து எறிந்து படத்தை ஒட்டிய பாஜக கவுன்சிலர்களை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.