கொல்லங்கோடு: முந்திரி ஆலை முன் முற்றுகையிட்ட பெண்கள்

கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியில் கேரளாவை சேர்ந்த ஒருவர் நடத்தி வந்த முந்திரி ஆலை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. தற்போது உரிமையாளர் முந்திரி ஆலை கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி, நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். 

இது பற்றி தகவல் அறிந்த அங்கு வேலை செய்த பெண்கள் ஏராளமானவர்கள் ஆலை முன் திரண்டு உரிமையாளர் தரவேண்டிய பண பலன்களை கொடுத்துவிட்டு நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறி ஆலை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் ஆலை மேலாளர் மற்றும் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற 30-ஆம் தேதிக்குள் கிடைக்க வேண்டிய பண பலன்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி