இந்த நிலத்தின் திட்ட வரைபடம் பத்மநாதபுரம் உதவி ஆட்சியர் அலுவலகம், கிள்ளியூர் தாலுகா அலுவலகம் மற்றும் கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் வேலை நாட்களில் நேரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்யவும் நில அளவுகளை எடுக்கவும் ஆய்வுகள் செய்யவும் சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட தேதியிலிருந்து 60 நாட்களில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியான பத்மநாதபுரம் உதவி ஆட்சியர் இடம் தகவல் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.