இரணியல், கண்டன்விளையைச் சேர்ந்த போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் அரசு (59) என்பவரிடம், நெய்யூர் பகுதியைச் சேர்ந்த டென்சன் (53) மற்றும் அவரது மகன் டைசன் (28) ஆகியோர், அருள் அரசின் மகனுக்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹1.20 லட்சம் மோசடி செய்துள்ளனர். வேலை வாங்கித் தராததால், குமரி மாவட்ட எஸ்பியிடம் அருள் அரசு புகார் அளித்தார். இதனையடுத்து, இரணியல் போலீசார் தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.