இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் அமத்சியா, செல்வின், நித்தின் உள்ளிட்டோர் (செப். , 13) இரவு அந்த சாலையில் சிதறி கிடந்த சல்லிகளை சுயமாக அகற்றி சாலையை சுத்தப்படுத்தி, அபாய குழியை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தி லோக்கல் ஆப்பில் வைரலானது. இதையடுத்து கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார் அந்த வாலிபர்களை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் கடந்த 19-ம் தேதி இரவு சாலையை சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட லோக்கல் ஆப் நிறுவனத்திற்கு இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.