இதனை நம்பிய திஜின் ராஜன் மற்றும் சகுந்தலாவின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூபாய் 7 லட்சத்து 98 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். இதை அடுத்து சில நாட்களுக்கு பிறகு திஜினை டெல்லி மற்றும் கேரளாவுக்கு அழைத்துச் சென்று எழுத்து தேர்வு, மெடிக்கல் என 2 தேர்வுகள் எழுத வைத்துள்ளார்கள்.
தொடர்ந்து சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு தேர்வாகி உள்ளதாக கூறி போலி நியமன ஆணையை அளித்துள்ளனர். வேலை கிடைத்ததாக நம்பி பணியில் சேர்வதற்காக சென்னைக்கு சென்று விசாரித்த போது அது போலியாணை என தெரிந்தது.
இதையடுத்து உடனே சொந்த ஊருக்கு புறப்பட்ட தி ஜின் நேற்று திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜன் மற்றும் சகுந்தலா ஆகியோரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.