மதுராந்தகம்: டாஸ்மாக் மதுபாட்டிலில் புழு முட்டைகள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் கீழவலம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. மது பிரியர் சிகாமணி என்பவர் அந்த மதுபான கடையில் விலை குறைந்த மதுபான குவாட்டர் பாட்டிலை ஒன்று வாங்கி உள்ளார். அதில் புழு முட்டைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

பின்பு கடைக்காரரிடம் இது பற்றி கேட்கும் போது, "இது அரசாங்கம் விற்கும் சரக்கு, நாங்கள் என்ன செய்ய?" என்று பதில் கூறுவதும், "நீ எங்கு சென்றாலும் ஒன்று நடக்காது" என அரசு மதுபான கடை ஊழியர்கள் திமிராக பேசுவதாக கூறிய மது பிரியர், இந்த கடையில் எப்பொழுதும் அரசு நிர்ணயித்த தொகையை விட ஒரு குவாட்டருக்கு பத்து ரூபாய் கூடுதலாக தான் வாங்குகிறார்கள் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி