இதன்படி, மாநில நெடுஞ்சாலை துறை, 2022 -- - 23 நிதி ஆண்டில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 37. 08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
தொடர்ந்து, பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால், சாலை அமைக்கும் இடத்தில் மழை வெள்ளநீர் சூழ்ந்து இருந்தது. இதனால் பணி தடைப்பட்டு வந்தது. தற்போது, மழை வெள்ளநீர் வடிந்ததால், வேடபாளையம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை, மாநில நெடுஞ்சாலை துறையினர் மீண்டும் துவக்கி, மும்முரமாக செய்து வருகின்றனர்.