இந்த சாலையை பயன்படுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், காவனூர் புதுச்சேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.தற்போது, இந்த சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து போக்குவரத்துக்கு ஏதுவாகாத நிலையில் உள்ளது. இதன் வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர், மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும், மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கும் மழைநீரில் சிக்கி விழுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா