உத்திரமேரூர் அருகே வெங்கடேச பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா

உத்திரமேரூர் அருகே கெங்கையம்மன் மற்றும் வெங்கடேச பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உச்சிக்கொல்லைமேடு கிராமத்தில் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் மற்றும் வெங்கடேச பெருமாள் ஆலயம் புதிதாக நிறுவப்பட்டு பரிவார தெய்வங்கள், விநாயகர், முருகர், நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்து இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. 

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஆலயத்தில் முன்பு யாக சாலை அமைக்கப்பட்டு, நேற்று, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி, கும்பாலங்காரம், முதல்கால யாக பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, இன்று, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், நாடி சந்தனம், தத்வார்ச்சனை மகா பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுர கலசத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்கள் ஊற்றி தீபாராதனைகள் காண்பித்து கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். அதைத்தொடர்ந்து, பக்தர்கள் மேல் புனித நீர் தெளித்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி