இந்த தடுப்பு பலகையின் நடுவே இருந்த, இரும்பிலான திருகு ஆணி இல்லை. இதனால், மழை காலங்களில் ஏரி நிரம்பினால், உபரி நீரை திறந்து விட முடியாத நிலைக்கு உள்ளது.
அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்லும் போது, உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உபரி நீர் வெளியேறும் தடுப்பு பலகைக்கு திருகு ஆணி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.