இந்நிலையில், கடந்த 23ம் தேதி குருசேவ், தன் நண்பருடன் செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி. சாலையில் சென்ற போது, திருடுபோன இவரது பைக், முன்னால் சென்றுள்ளது. அதில், இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் சென்றுள்ளனர். அவர்களை மடக்கி வாகனம் குறித்து கேட்ட போது, தப்பிச் சென்றனர். இதை மொபைல் போனில் வீடியோ எடுத்த குருசேவ், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருடிய இருசக்கர வாகனத்தை அந்த இளைஞர், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில், யாருக்கும் தெரியாமல் நிறுத்தி விட்டுச் சென்றார். இதையடுத்து, மறைமலைநகரிலுள்ள தனியார் தொழிற்சாலைக்குச் சென்ற போலீசார், அங்கிருந்த சந்தோஷை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.