காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் செல்வழிமங்கலம், கீரநல்லூர், சேந்தமங்கலம், பொடவூர் மற்றும் ராமாநுஜபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செல்வழிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் எஸ். டி. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தி சுமார் 30க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு கடனுதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வசந்தி ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, முத்துகணபதி ஊராட்சி மன்ற தலைவர்கள் கீரநல்லூர் அன்பரசு, சேந்தமங்கலம் சார்லஸ், பொடவூர் ஜீவாரவி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.