மேலும், 5 வாரங்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், 200 நாள் வேலை வாய்ப்பு, ரூ. 600 கூலி வழங்க வேண்டும், நூறுநாள் வேலை வாய்ப்புக்கு ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை வழங்கப்படும் என அறிவித்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் பணி வழங்காததை கண்டித்து கொளத்தூர் பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்