இந்நிலையில், இங்கு வாகனங்கள் அதிக அளவில் வருவதை தொடர்ந்து, ஒப்பந்தம் பெறப்பட்டுள்ள எல்லை மட்டுமின்றி, பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் இடம், பயணியர் நடந்து செல்லும் இடங்களையும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி, அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால், பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கும், பயணியருக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.