இந்நிலையில், அவசரம் கருதி உடனடியாக தீயணைப்பு நிலையம் தற்காலிக கட்டிடத்தில் இயக்க அரசு முடிவு செய்தது. இதனையடுத்து, கோவளம் நூலக வளாகத்தில் தற்காலிக கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் துவக்க விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன், சப் கலெக்டர் நாராயணசர்மா, திருப்போரூர் சேர்மேன் இதயவர்மன், ஊராட்சி தலைவர் சோபனா உள்ளிட்டோருடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்