இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். காற்று வீசும்போது குப்பை சாலையில் பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், குப்பையில் இரை தேடி வரும் கால்நடைகள், திடீரென சாலையில் குறுக்கே ஒடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே, நெடுஞ்சாலையோரங்களில் குப்பை மற்றம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுபவர்களின் மீது சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.