மாமல்லபுரம் வருகை தந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள்

சர்வதேச அளவில் மாமல்லபுரம் சுற்றுலா நகரம் புகழ் பெற்று விளங்கி வருகிறது. இங்குள்ள புராதன சின்னங்களைச் சுற்றிப் பார்க்க உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் நாளொன்றுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கண் பார்வையற்ற சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சமூக சேவகர்கள் சிலர் மூலம் பாரீஸ் நகரத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நேற்று சொகுசு பேருந்து மூலம் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர். ஐந்துரதம் பகுதிக்கு வந்த அவர்களை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் வரவேற்றார்.

 கண் பார்வையற்ற பிரான்ஸ் நாட்டுப் பயணிகளுடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சிற்பங்கள் பல்லவர் காலத்தில் எந்த மன்னரால் செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை தெளிவாக விளக்கிக் கூறினார். தொடர்ந்து ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களுக்கு அருகில் கண்பார்வையற்ற பிரான்ஸ் நாட்டினர் அங்கு அமர்ந்து கைகளால் சிற்பங்களைத் தொட்டுப் பார்த்தும், தங்களது கைகளால் தட்டி அதன் ஓசையைக் காதில் கேட்டும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, சிற்பங்கள் குறித்து விளக்கிய சுற்றுலா வழிகாட்டியிடம் "பல்லவ மன்னர்கள் செதுக்கிய சிற்பங்களை எங்களால் தொட்டுத்தான் பார்க்க முடிந்தது.

தொடர்புடைய செய்தி