வரவேற்பை கண்டு பூரிப்படைந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பான வரவேற்ப்பளித்ததை பாராட்டினார். இதையடுத்து அவரது வருகையையொட்டி இரவும் பகலும் அயராது பாடுபட்ட நிர்வாகிகளை பாராட்டும் விதமாக திருக்கழுக்குன்றம் தனியார் திருமண மண்டபத்தில் பேரூராட்சி கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் அருள்மணி, பேரூராட்சி கழக துணைச்செயலாளர்கள் இளங்கோ, சரவணன், தெளலத் பீவி, மாவட்ட பிரதிநிதிகள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, பழனி, மற்றும் 18 வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் பேரூராட்சி செயலாளர் நன்றி கூறி சால்வை அணிவித்து பிரியாணி விருந்தளித்தார்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்