இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் 31-ம் தேதி காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் உற்சவர் பிரகலாத வரதர் த்வஜாரோஹண மண்டபத்தில் எழுந்தருளி கோவில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பத்து நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருள்வார். இன்று கருடவாகன உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ பெருவிழாவில் 5ம் தேதி மாலை யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வரும் 6ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ