இச்சாலையை பயன்படுத்தி உத்திரமேரூர், மதுராந்தகம், புக்கத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையை இருவழி சாலையாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் தீர்மானித்தனர். அதன்படி, அமராவதிபட்டணத்தில் துவங்கி, நெல்வாய் கூட்டுச்சாலை வரையிலான 9 கி.மீ. தூரம் கொண்ட சாலையை அகலப்படுத்துதல், சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் வடிகால்வாய்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. சுந்தர் பங்கேற்று கொடியசைத்து சாலை பணியை துவக்கி வைத்தார். இதில், நெடுஞ்சாலைத்துறை காஞ்சிபுரம் கோட்ட பொறியாளர் முரளிதரன், உதவி கோட்ட பொறியாளர் அனந்தகல்யாணராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.