இந்த நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து இரைக்காக வந்த வெளிநாட்டுக் கூழைக்கடா பறவை மதுராந்தகம் ராமர் கோவில் குளத்தில் உள்ள இரும்புக் கேட்டில் மாட்டிக்கொண்டு பறக்க முடியாமல் நீண்ட நேரமாக அவதிப்பட்டு வந்தது.
அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் பறவையை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள் பறவையை மதுராந்தகம் ஏரியில் விட்டனர்.