2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி. தி. சினேகா, இ. ஆ. ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜவஹர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு. சோமசுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த ஆய்வு, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.