எனினும், சில இடங்களில் பணிகளை முடிக்காமல் பாதியில் விடப்பட்டுள்ளது. அந்த வகையில், திருப்போரூர் ஓ. எம். ஆர். , சாலை, ஏரிக்கரை சாலை இணையும் இடத்தில், மழைநீர் வடிகால்வாய் இணைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட கால்வாயிலும், கழிவுநீர் குளம் போல தேங்கியுள்ளது.
கால்வாயில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் நாளுக்கு நாள் அதிகரித்து, கால்வாயிலிருந்து வெளியேறி சாலையில் ஓடுகிறது.
அந்த வழியாக செல்லும் மக்கள், அதனை மிதித்துக் கடப்பதுடன், துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதியுடன் செல்கின்றனர்.
எவவே, மேற்கண்ட இடத்தில் மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கழிவுநீர் சாலையில் ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.