இந்நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் திருப்போரூர் ஆறுவழிச்சாலையில் சினிமா படப்பிடிப்பு நடந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த படப்பிடிப்பால் இச்சாலையில், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், எதிர்சாலையில் வாகனங்கள் மாற்றிவிடப்பட்டன. அதில் எதிரெதிரே வாகனங்கள் சென்று வந்தன. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இதுபோல் நடக்கும் சினிமா படப்பிடிப்புக்கு போலீசார், பேரூராட்சி, நெடுஞ்சாலை, சாலை மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகள் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!