நாட்டின் 76வது குடியரசு தின விழாவான இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை யொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி விட்டு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் முவர்ண பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பறக்கவிட்டார். பல்வேறு துறைகளின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்