சென்னை துறைமுகத்தில் கண்டெய்னரை இறக்கிவிட்டு திரும்பிய போது, லாரி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவரான மாரியப்பன், லாரியில் ஏற்றி இருந்த கண்டெய்னரை இறக்கிவிட்டு, மீண்டும் லாரியை இயக்கிய போது, எதிர்பாராத விதமாக லாரி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாரியப்பன் கடலில் மூழ்கினார். தகவலறிந்து வந்த மீட்புகுழுவினர் மாரியப்பனை தேடி வருகின்றனர்.