அப்போது அங்கு நின்றுபேசிக்கொண்டிருந்த இரண்டுநபர்கள், வேனின்மீது சாய்ந்ததால், பெயின்ட் அழிந்துள்ளது. இதனால், பார்த்திபன் அந்தநபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த அவர்கள் இருவரும், கீழேகிடந்த காலிமதுபாட்டிலை எடுத்து, பார்த்திபன் தலையில் அடித்துள்ளனர். உடனே, அங்கிருந்தோர் மேற்கண்ட இருவரையும் மடக்கிபிடித்து, மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
பார்த்திபனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார், 22, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா, 25, என தெரிந்தது. இருவரும் மறைமலைநகர் பகுதியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்துவந்துள்ளனர். இருவரையும் கைதுசெய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.