அன்வரின் உறவினர் வீட்டின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கடந்த வாரம் ராமு அரிச்சந்திராபுரத்திற்கு சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற வாலிபர்கள் சிலர், நண்பருக்கு போன் செய்துவிட்டு தருவதாக கூறி, ராமுவின் மொபைல்போனை வாங்கிக் கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து ராமு அளித்த புகாரின்படி, திருவலாங்காடு போலீசார் விசாரணையில், அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த இர்பான் அலி (21), ஷேக் யாசின் (19), பயாஸ் (19), என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.