சென்னை தாம்பரம் அருகே நிலத்தை குறைத்து பதிவு செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் ரேவதி, ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருடன் உதவியாளர் பிரவீன்குமாரும் கைது செய்யப்பட்டார். பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிகள் இது தொடர்பாக அடிக்கடி ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்தும் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.