அதனால் ஜெயக்குமார் கூரை வீட்டை இடித்து கையில் இருந்த பணத்தில் பேஸ் மட்டம் வரை கட்டிடப் பணியை செய்துள்ளார். இரண்டு வருடங்களாக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை அணுகி செய்து முடித்த பணிக்கான கூலியை கேட்டுள்ளார். அதற்கு உனது வங்கி கணக்கை சரிபார்க்கவும், இரண்டு நாட்களில் உனக்கு பணம் வரும் என்று சொல்லியதாக கூறப்படுகிறது. ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வார்த்தையில் சந்தேகம் அடைந்த ஜெயக்குமார் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொகுப்பு வீடு குறித்து கேட்டுள்ளார். அதற்கு பிடிஓ உங்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை எதுவும் வழங்கவில்லை எனவும், உங்களுக்கு தொகுப்பு வீடே ஒதுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்