இவற்றில், காஞ்சிபுரம் அருகே உள்ள களக்காட்டூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார்.
களக்காட்டூர் மற்றும் குருவிமலை பகுதியிலுள்ள விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள 696 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் கொள்முதல் செய்ய, இங்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.