பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர், பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி கட்டண கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கட்டண கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த கழிப்பறை பெயரளவில் கூட பராமரிப்பு இல்லாமல், மிக மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், கழிப்பறை மது அருந்து கூடாரமாக மாறி உள்ளது.