அதைத் தொடர்ந்து நேற்று கணபதி பூஜை மற்றும் 2 ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை முதல் யாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் யாகம் நடத்தி புண்ணிய தளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை வைத்து 4 ஆம் கால யாக பூஜை மங்கள வாத்தியம், கைலாய வாத்திய இசையுடன் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மங்கள இசையுடன் கலசம் புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ கங்கையாம்மன், ஸ்ரீ வடக்கீர்வரர், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத சிவ சுப்பிரமணியர், ஸ்ரீ தேவி பூ சமேத, ஸ்ரீ நிவாச பெருமாள் மற்றும் பரிவார ஆலய ஸ்ரீ கங்கையம்மன் உள்ளிட்ட சாமிகள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கருவறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மனுக்கு புனிதநீர் ஊற்றி அலங்காரம் செய்து தீபாராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட 500 ககும் மேற்பட்டவர்க்கி அன்னதானம் வழங்கப்பட்டது.