சென்னையை அடுத்த புகழ்பெற்ற கோவளம் கடற்கரை, 2025-26 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக நீலக் கொடி சான்றிதழைப் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) நிர்ணயித்த உலகத் தரங்களை கோவளம் கடற்கரை மீண்டும் பூர்த்தி செய்துள்ளதாக ப்ளூ பிளாக் இந்தியா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவித்துள்ளது. இது கடற்கரையின் தூய்மை மற்றும் உலகத் தரத்திலான வசதிகளை உறுதி செய்கிறது.