கடையில் சோதனை செய்த போலீசார், மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 109 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். தவிர, குட்காவை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு கார், மூன்று மொபைல் போன் மற்றும் 53,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அருள் செல்வன் (41), விஜி (36) என தெரிந்தது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் (பிப்.21) அவர்களை ஆஜர்படுத்தினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்