அதில், ஓய்வு பெற்றவரை மீண்டும் நியமித்தது ஏன்?, ராமானுஜருக்கு அணிவித்த முத்துமணி மாலை எங்கே?, தொன்று தொட்டு காலமாக அதிகேசவப் பெருமாளையும் ராமானுஜரையும் தோலில் சுமந்து செல்லும் பாதாங்கிகளுக்கு பதிலாக புதியதாக வெளியூர் ஆட்களை நியமித்தது ஏன்?, 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ராமானுஜர் மணிமண்டபத்தை பூட்டியே வைத்து பக்தர்களை ஏமாற்றுவது ஏன்? என, காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது, பக்தர்களையும் பொதுமக்களையும் மத்தியில் பல சந்தேகங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?