அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள ஆட்சீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி