கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ஆதி திராவிடர், பழங்குடியினர் நல நிதி மாற்றி பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்றும், திட்டத்திற்கான கூடுதல் செலவு தனி நிதி ஒதுக்கீட்டின் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு விளக்கமளித்துள்ளது.